புயலுக்கு பிந்தய ஆந்திர மக்களின் பரிதாபகரமான நிலைமை

Monday, October 05, 2009
நண்பர் ஒருவர் ஆந்திராவை சேர்ந்தவர் அவருடன் உரையாடிக்கொண்டு இருந்த பொழுது அவர் புயலின் பொழுதும் புயலுக்கு பின்னரும் ஆந்திராவில் நிலவும் பரிதாபக்கரமான நிலைமையை விவரித்த பொழுது ஏன் இந்த உலகம் இன்னமும் அழியாம இருக்குன்னு தோணுது. அவர் சொல்வதைப்பார்த்தால் நாம் இந்தியாவில் இருக்கிறோமா இல்லை ஆப்ரிக்காவின் ஏதாவது ஒரு மூலையில் இருக்கிறோமான்னே தெரியலை.

* அரிசி ஒரு கிலோ ரூபாய் 100க்கு விற்கப்படுகிறது.

*கர்ணூர் மற்றும் ஒஸ்பேட் பகுதிகளில் Dam உடைந்து விட்டது என்ற வதந்தியின் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பீதியுற்று அந்த பகுதியை விட்டு வெளியேற முயற்சி செய்தனர்.

*வெள்ளத்தில் சிக்கியுள்ளோரை காப்பாற்ற அரசு முயற்சி எடுக்காத பொழுது தனியார் அதை தங்களுக்கு சாதகமாக்கி படகுகளை விட்டு கிடைத்த வரை லாபம் என்ற வகையில் ஒருவரை காப்பாற்ற சுமார் இருபதாயிரம் ரூபாய் வரை கேட்கின்றனர். பணம் இருக்கிறவர்கள் பணம், நகை குடுத்தும் சிலர் வேற வழியில்லாமல் பிணத்தின் நகைகளை கூட எடுத்து குடுத்து தங்களை காத்துக்கொண்டனர்.

* இறந்தவர்களிடம் இருந்து கொள்ளையடிக்க ஒரு கூட்டமும் வெள்ளம் காரணமாக வீட்டை பூட்டப்பட்டிருக்கும் வீட்டில் கொள்ளையடிக்க ஒரு கூட்டம் என்று பல கூட்டங்கள் புறப்பட்டு இருப்பதாக சொல்கிறார்கள்.

*பெரும்பாலான மக்களுக்கு நிவாரண உதவி கிடைக்கவில்லை. இன்னமும் நிறைய பேர் வெள்ளத்தில் சிக்கி தவித்துக்கொண்டு இருக்கின்றனர்.


*கர்ணுல் பகுதி மிக அதிகமாக பாதிகப்பட்ட பகுதிகளில் ஒன்று அதே நேரத்தில் அந்த பகுதியில் இன்னமும் நிறைய பேர் உதவிக்காக தவித்துக்கொண்டு இருப்பதாக தெரிகிறது.

*ஆந்திர முதல்வர் பெரிய அளவில் செயல்ப்பட்டதாக தெரியவில்லை.இந்திய பிரதமரின் ரப்பர் ஸ்டாம்பான மன்மோகன் சிங்கும், இந்திய பிரதமர் சோனியா காந்தியும் நாங்க போயி சுத்தி பாத்த பிறகு தான் நிவாரணம் அளிக்க முடியும் என்று சொல்லிட்டாங்க அது வரைக்கும் சாகக்கிடக்கிறவனெல்லாம் செத்துட்டு தான் இருக்கணும்.

*நம்மாளு தமிழினத்தலிவராகட்டும், கொடநாட்டு குயினாகட்டும் அவங்களுக்கும் இதுக்கும் சம்மந்தமே இல்லாத மாதிரி உதவி இதை பத்தி வாயே தொரக்கலை. ஆந்திராகாரன் தண்ணிக்கு மட்டும் வேணும் அவன் கஷ்டப்படும் பொழுது மானாட மயிலாட நிகழ்ச்சியே போதும் நல்லா இருங்க.

*இவ்வுளவு விஷயம் நடந்துகொண்டு இருக்கிறது செய்தி ஊடகங்களில் தலைப்பு செய்தி ஏதோ இரு விமானத்தில் விமானிக்கும் பணிப்பெண்ணுக்கும் சண்டையாம். நாட்டுக்கு ரொம்ப முக்கியம் பாருங்க, நல்லா இருங்கடா.

*இதுக்கு நடுவுல மந்திராலயத்தில் மீண்டும் வெள்ளம் வரும் என்று புரளியை விடுத்த போலீசாருக்கு பொது மக்கள் பொது மாத்து குடுத்து இருக்காங்க.

இப்படி கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம அரசு இருப்பதினால் தான் மக்கள் நக்சலைட்டுகளுக்கு இன்றளவும் ஆதரவு அளித்துக்கொண்டு இருக்கிறார்கள். கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாம இருக்குற இந்த உலகம் இருந்தா என்ன அழிஞ்சா என்ன?
Read On 9 பேர் கருத்து சொல்லி இருக்காங்க நீங்களும் சொல்லலாமே

இதை சொல்ல வெக்கப்படவே மாட்டிங்களா சுசி கணேசன்?

Wednesday, September 23, 2009
இன்னிக்கு சுசி கணேசனோட பேட்டி கே டிவியில கேட்டேன். அதுல கந்தசாமி படத்தை பத்தி ரொம்ப சில காகித்து பேசிட்டு இருந்தாரு. அதுல அவரு சொன்ன முக்கியமான விஷயம் கந்தசாமி படம் ஒரு மிகப்பெரிய ஹிட்டாமா, அதை பத்தி விமர்சனம் செய்றவங்களுக்கு எல்லாம் பொறாமையமா, நாம எல்லாம் எவ்வுளவோ முயற்சி செய்தும் ஹிட் குடுக்க முடியலையே, இவன் மட்டும் எப்படி மூணு வாரத்துலையே போட்ட முதல் மொத்ததையும் எடுத்துட்டான் அப்படிங்கிற பொறாமையாமா.

அதுவும் முக்கியமா இவருக்கு ஞானி மேல என்ன காண்டோ தெரியலை. சில பேர் 500 ரூபாய்க்கு நல்ல படம் எடுக்குறேன்னு திட்டம் போட்டு அது மகா பிளாப் ஆயிடிச்சி, அனா இவன் மட்டும் கோடிக்கணக்குல முதல் போட்டு ஒரு சூப்பர் ஹிட் படம் எடுத்து போட்ட முதலை எடுத்துட்டானே அப்படிங்கிற கடுப்புல படத்தை பத்தி தப்பு தப்பா பேசுறாங்க. இவரை மாதிரி தாங்க நிறைய பேர் பாட்டு எழுத வாய்ப்பு தரலை, வசனம் எழுத வாய்ப்பு தரலை அப்படிங்கிற கடுப்புல படத்தை பத்தி தப்பு தப்பா பேசுறாங்க.. ஆனா படம் சூப்பர் அப்படிங்கிற விஷயம் அதன் மிகப்பெரிய வெற்றியே காட்டுது அப்படிங்கிறாரு. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..நாட்ல இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலைடா நாராயணா..
Read On 5 பேர் கருத்து சொல்லி இருக்காங்க நீங்களும் சொல்லலாமே

உன்னைப்போல் ஒருவன் - சில கேள்விகள்/மாற்றுக்கருத்துக்கள்

Tuesday, September 22, 2009
உன்னைப்போல் ஒருவன் படத்தை பார்க்காதவர்கள் அல்லது அதை பார்க்க திட்டமிட்டுக்கொண்டு இருப்பவர்கள் இந்த பதிவை படிக்காமல் இருப்பது நலம் ஏன்னா இதில் இறுதிக்காட்சி அல்லது climax குறித்த கருத்துக்கள் உள்ளன.உன்னைப்போல் ஒருவன் படத்தை பார்க்கும் பொழுது எனக்குள் தோன்றிய சில கேள்விகள்/கருத்துக்கள்

அதென்னா உலகம் முழுவதும் தீவிரவாதிகள் அப்படின்னா முஸ்லிம்கள் தானா? பொழுது போவலைன்னா காசா பகுதியில குண்டு போடுற இஸ்ரேல்காரன், அதிநவீன ஆயுதங்களை பரிசோதனை செய்ய போர் தொடுக்கிற அமெரிக்கன்/ரஷ்யன், இப்ப இந்தியாவுல பங்கு கேட்குற கம்யூனிஸ்டு சீனாகாரன், அவ்வுளவு ஏன் கோவில் கட்டுறேன்னு ஒரளவு அமைதியா இருந்து நாட்டுல இஸ்லாமிய தீவிரவாதத்தை துண்டிவிட்ட இந்து கட்சிக்காரன், மாவோயிஸ்டுகள், இவங்க எல்லாம் காந்தியவாதிங்களா?

குஜராத் சம்பவங்களுக்காக அந்த முஸ்லீம் தீவிரவாதிகளை கொல்வதாக சொல்கிற நீங்க? அதெப்படி சார் ஹிந்துக்கள் செய்த தவறுக்கு ஒரு முஸ்லீம் தீவிரவாதியை கொல்வீங்க? ஒருவேலை ஹிந்து தீவிரவாதிகளை கைகாட்ட பயமோ?

என்னோட நினைவு தெரிந்து கோவை குண்டுவெடிப்புக்கு பிறகு தான் குஜராத் கலவரம் நடந்தது? ஒருவேளை பிற்காலத்தில் நடக்க இருக்கு குஜராத் கலவரத்தை முன்னாடியே தெரிந்து கோவையில குண்டு வெச்சி இருப்பாங்களோ?

யோசித்து பார்த்தால் பாபர் மசூதி சம்பவத்துக்கு முன்னாடி காஷ்மீர் தவிர வேறு எங்கும் பெரிய அளவிலான முஸ்லீம் தீவிரவாதம் இருந்தது இல்லையே?அப்ப பாபர் மசூதியை இடிச்சவங்களுக்கும் அந்த இடத்தில் கோவில் கட்ட செங்கல் அனுப்பியவன், நிதி அனுப்பியவன் எல்லாம் யோக்கியனோ?

அதென்னா தமிழ்படங்களில் ஒரு குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவங்க மட்டும் அநியாயங்களை கண்டு பொங்கி எழுறாங்க? ஒவரா சங்கர் படம் பார்ப்பதின் விளைவோ இல்ல மத்தவங்க எல்லாம் எருமை மாடா?

அப்பறம் சமீப கால கமல் படங்களை பார்த்து தோன்றிய இன்னொறு விஷயம்.. வ்யசு ஆக ஆக உங்க கருப்பு துண்டு ஏன் மஞ்ச துண்டா மாறிட்டு வருது? ஒரு வேளை இது தான் பகுத்தறிவின் பரிணாம வளர்ச்சியோ?
Read On 32 பேர் கருத்து சொல்லி இருக்காங்க நீங்களும் சொல்லலாமே

ஏழை மாணவர்களுக்கு உதவ ஒரு முயற்சி

Friday, September 11, 2009
என்னுடைய நண்பன் ஒருவன் மாணவர்களுக்கு உதவ ஒரு திட்டம் தயாரித்துள்ளான் அதன் படி நம்மிடம் உள்ள பழைய நமக்கு உபயோகம் இல்லா புத்தகங்களை திரட்டி ஒரு சுழற்சி நூலகம் போல் உருவாக்கி.தேவைப்படும் ஏழை மாணவர்களுக்கு இலவசமாகவும் மற்றவர்களுக்கு ஒரு சிறு தொகை (இதன் மூலம் பெறப்படும் தொகை புத்தகங்களின் பராமரிப்புக்கு உபயோகப்படுத்தப்படும் ) வாங்கிக்கொண்டும் அளிக்கப்படும். எனவே உங்களிடம் இருக்கும் பழைய உபயோகிக்க கூடிய புத்தகங்கள் ஏதேணும் இருந்தால் எங்களுக்கு தெரிவியுங்கள். நீங்கள் அளிக்கும் புத்தகங்கள் Technical அல்லது acadamic ஆக இருந்தால் பெரிய உதவியாக இருக்கும்.

நீங்கள் சென்னையிலோ அல்லது பெங்களூரிலோ இருக்கும்பட்சத்தில் எங்களில் ஒருவர் உங்களை தொடர்பு கொண்டு புத்தகங்களை பெற்றுக்கொள்கிறோம் இல்லையெனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கும் நீங்க அந்த புத்தகங்களை அனுப்பலாம்:

V.Rajagopal
No.45 Elisa Nagar,
Serfoji College Post
Tanjore - 613005

நண்பனின் ஆங்கில் மின்னஞ்சல்:

Hi Friends,


Hope all are doing well.


I am Planning to start a mini library with all kinds of college books, which will help college students during their studies. Students can avail the books and keep it with them for one semester (i.e.,) till their semester exams are over. This will help them to save money by avoiding photocopies of the book. We can collect some 5-10% of the book price as a fee from the students who can afford. For poor we can give for free. The amount we receive from students can be used to purchase more books as well as to repair the damaged books like binding.

Since most of us have books which is staying in our shelves without use. I have started collecting books from people who don't really need them and they are willing to give for this service. Based on the books collected we can start the process from next academic year.

I hope in long run we can have sufficient number of books.
you guys can let us know where to collect the books (preferably if you are in chennai or bangalore) or you are welcome to send the books to the below address:

V.Rajagopal
No.45 Elisa Nagar,
Serfoji College Post
Tanjore - 613005
Ph:9994709126

Please let me know your comments. I would appreciate if you can forward this email to your friends or put it in your blogs..

சந்தோஷங்களுடன்
சந்தோஷ்.
Read On 5 பேர் கருத்து சொல்லி இருக்காங்க நீங்களும் சொல்லலாமே

பிரபல பதிவர் கம் எழுத்தாளர் கிட்ட எனக்கு பிடிச்ச பத்து

Tuesday, September 08, 2009
இவரை பத்தி பெரிய அறிமுகமெல்லாம் தேவைப்படாது ஏன்னா இவரு தமிழில் ஒரு பெரிய non confirmists எழுத்தாளர் (பதிவு தலைப்பை தவிர வேற எதையும் சொந்தமா எழுதாத எழுத்தாளருங்களை இப்படி கூப்பிடுவாங்களோ?) மற்றும் கூகுளே (கூகுள் ரீடரே) பரிந்துரை செய்யும் அளவுக்கு பிரபலமான ஒரு எலக்கியவியாதி சே இலக்கியவாதி.இவரைப்போன்ற பிரபலத்துக்கு அறிமுகமே ஒவர் ஆனா ஆக்கித்தானே சாப்புடணுமுன்னு சொல்லியிருக்குறதால அறிமுகப்படுத்தியிருக்கேன். இப்ப நாம இந்த பதிவை அடுத்த சதுரத்துக்கு (எம்முட்டு நாள் தான் அடுத்த கட்டத்துக்கே போயிட்டு இருக்குறது) நகத்திட்டு போவோம்.. அதாங்க இவர் தளத்துல எனக்கு புடிச்ச பத்து..

1) எழுத்தாளரு எழுத்தாளருன்னு சொல்றீங்களே அப்படி என்னாத்தை எழுதி கிழிச்சிட்டிங்கன்னு கேட்ட எல்லாருக்கும் மத்த எழுத்தாளருங்க போல ஒரு நாலு ஜந்து புத்தகங்களையோ இல்ல நாலு ஜந்து இதழ்களையோ போடாம (டேய் யாருடா அங்க, இருந்தா தானே போடுறதுக்குன்னு சொல்றது), Writer CSK அப்படின்னு உங்க பெயருல இருக்குற Writerஜ Bold பண்ணி போட்டு நீங்க ஒரு non confirmist எழுத்தாளருன்னு நிரூபிச்சிங்க பாருங்க அந்த confidence எனக்கு நொம்ப புடிச்சது.

2) பெரிய பெரிய எழுத்தாளருங்களே (உங்களை மாதிரி மிகப்பெரிய எழுத்தாளருங்க இல்ல நிசமாவே ஏதையாச்சும் தமிழில் எழுதியவங்க) balakumaranonline, அப்படி இப்படின்னு தளம் ஆரம்பிச்சி தத்தளிச்சிட்டு இருக்கும் பொழுது அதிரடியா நீங்க ஒரு எழுத்தாளருன்னு உலகத்துக்கே தெரிவிக்கிற மாதிரி writercsk.com முன்னு ஒரு தளத்தை ஆரம்பிச்சி நானும் ரவுடி தான் சே நானும் எழுத்தாளர் தான் எழுத்தாளர் தான்னு ஜிப்சி ஜீப்புல ஏறுனீங்க பாருங்க அந்த ஆர்வத்தை பாத்து நான் அப்படியே ஷாக்காயிட்டேன்.

3) சில ஆன்லைன் பாருகளையும், விளையாட்டு திடல்களையும் பாத்துட்டு புணர்ச்சி மற்றும் இன்ன பிற மேட்டர் கதைகள் எழுதினா தான் எழுத்தளருன்னு தப்பா நெனைச்சிகிட்டு, 13 வயசு பச்ச புள்ள கிட்ட அசிங்க அசிங்கமா பேசுனதை பெருமையா பதிவுல போட்டு (pervert நாயே, அசிங்கமா வாயில வருது இந்தியா இருந்ததினால் சகா புகா வெல்லாம் வெளியே இருக்கிங்க அமெரிக்காவா இருந்தா இதுக்கே உன்னைய நுங்கு எடுத்து இருப்பாங்க..) உன்னோட மானெங்கெட்ட தனத்தை வெக்கமில்லாம வெளியே சொன்னியே அதைப்பாத்து அப்படியே துப்ப வந்த காரி கூட உள்ள போயிடிச்சி.

4) நானே கேள்வி நானே பதில் மாதிரி...கேட்க்கப்பட்ட இளையராஜாவோட ஆயிரம் பாட்டுக்களை ஒரே பதிவுல போட்டா அடுத்து போட மேட்டர் இருக்காதுன்னு அதை பத்து பத்தா பிரிச்சி நூறு பதிவுகளா போட்ட உங்க நிர்வாக திறமையை பாத்து..நாணலாப்போயிட்டேன்..

5) இப்படியெல்லாம் டூபாக்கூர் வேலை செய்தும் பதிவு போட எதுவும் இல்லாம Baba Black Sheep போன்ற நர்சரி ரைம்ஸை எல்லாம் பதிவா போட்டு புல்லரிக்கும் உங்க ரசிப்புத்தன்மையை பாத்து..புல் அடிக்காமலே மப்பாயிடிச்சி வாத்தியாரே...

6) உங்களுக்குள்ள 6 சுஜாதா 7 கம்பர் 10 திருவள்ளுவர் இருக்குறதா நீங்க நெனைச்சிகிட்டு இருக்கும் பொழுது நீங்க ராஜேஷ் குமார் மாதிரி எழுதுறீங்கன்னு (யோவ் கார்த்திகேயன் ஆனாலும் ராஜேஷ்குமாரை நீ இப்படி அசிங்கப்படுத்தி இருக்க கூடாது) சொன்னதுக்கு கோபப்பட்டீங்க பாருங்க அதைப்பாத்து அப்படியே நான் பொரியல் ஆயிட்டேன் (எம்முட்டு நாள் தான் டரியால் ஆவுறது)..

7) ஒரு பத்து பதிவு போடுறது (ஜ மீன் பார்வேர்டு எல்லாத்தையும் பதிவா போடப்பட்ட பதிவுகளை) அப்புறம் அந்த பத்தோட லிங்கையும் ஒரு பதிவா போடுற அழகைபாத்து நான் அப்படியே அழுக்காயிட்டேன்..

8) தினமும் பதிவுங்கிற ஒரு பதிவுங்கிற பெயருல OB அடிச்சிட்டு இருந்தாலும்..இன்னிக்காச்சும் சொந்தமா எதாச்சும் எழுதுவாறா இன்னிக்காச்சும் சொந்தமா எழுதுவாறான்னு எழுதுவாரான்னு தினமும் எங்களை சீட் நுனிக்கே கொண்டுவெக்கிற திறமைக்கு முன்னாடி நாங்கலெல்லாம் தரை மட்டமாயிடறோம்..

9) கூகுள் ரீடருல ஏற்பட்ட தவறால உங்க தளத்தை தெரியாம ரீடரில் சேத்துகிட்டு அதை படிச்சி டரியலாகி கூகுள் ரீடரையே வெறுத்து, ஏங்க இப்படியெல்லாம் பதிவு போடறீங்கன்னு கேட்ட எங்களை உங்க நெடுநாள் வாசகராக்கிய உங்க வாசக வெறி எனக்கு ரொம்ப புடிச்சி இருக்கு..

10)நல்ல நல்ல படங்களை எல்லாம் குப்பைன்னு சொல்லிட்டு வாமனன், கந்தசாமி, அப்புறம் பொக்கிஷம் மாதிரியான குப்பைகளை சிலகாகித்து நல்ல படமுன்னு சொல்லி நான் ஒரு Non Confirmist Non confirmist சொல்லாம சொல்றீங்க பாருங்க அதை பாத்து trainல confirm ஆகி இருந்த என்னோட சீட் கூட Non confirm ஆயிடிச்சி..

இது மாதிரி இவரை பத்தி திருக்குறள் மாதிரி பத்து பத்தா சொல்லிட்டே போவலாம் ஆனா இவருக்கு வெளம்பரம் புடிக்காதுங்குற ஒரே காரணத்துனால இதை நான் இத்தோட முடிச்சிகிறேன்.. நான் பாட்டுக்கு சிவனேன்னு சும்மா தாங்க இருந்தேன் இந்த பதிவுல எலக்கியவியாதிங்களை பத்தி எழுதி இருந்தேன் இவரு என்னாமே இவரை பத்தி தான் எழுதினேன்னு நெனைச்சிகிட்டு (எலக்கியத்துக்கும் அவருக்கும் என்னா சம்மந்தம்) இன்னா செய்தாரை ஒருத்தல் அப்படி இப்படின்னு சீன் போட்டாரு..


அப்பறம் எழுத்தாளரே என்னைய எல்லாம் உங்க எலக்கிய போருக்கு இழுக்காதிங்க பாஸு நான் அம்முட்டு ஒர்த் எல்லாம் இல்ல.மகா சனங்களே இதுக்கெல்லாம் நான் பொறுப்பில்லை நான் நல்லவன் நல்லவன்.ரைட்டு அப்ப நெக்ஸ்டு மீட் பண்ணலாம்..

சந்தோஷங்களுடன்
சந்தோஷ்.
Read On 19 பேர் கருத்து சொல்லி இருக்காங்க நீங்களும் சொல்லலாமே

பதிவர்களை டரியலாக்கும் கருத்தாய்வு - மணற்கேணி

Tuesday, August 04, 2009
பொதுவா போட்டிவெச்சி அதுல கெலிக்கிறவங்களுக்கு சோப்பு டப்பா குடுப்பாங்க, சீப்பு குடுப்பாங்க இல்லாட்டி புக் குடுப்பாங்க இவிங்க என்னடா சிங்கப்பூருக்கு கூப்பிடுறாங்களேன்னு நாலு பேரை சம்பளத்துக்கு வெச்சி கதை கவிதை எழுத வெச்சா இவிங்க என்னடான்னா, கருத்தாய்வோ கம்மர்கட் முட்டாய் செய்யுன்னு இல்ல சொல்றாங்க..கதை கவிதைக்கே வழியில்லாம சம்பளத்துக்கு ஆள் வெச்சி எழுதுறோம்..இன்னான்னே புரியாத இதுக்கு எங்க போறதுன்னு யோச்சி என்னைய மாதிரி நாலு பதிவருங்களை கூகிள் அரட்டையில புடிச்சி இது இன்னான்னு கேட்டா இதை மாதிரி தெரியாத பாஷையில எல்லாம் திட்டுற வேலை வெச்சிகாதேன்னு சொல்லிட்டு அன்னிக்கு போனவங்க தான் அப்புறம் அரட்டை பொட்டியில ஆளையே காணோம்..ஒரு வேளை கருத்து”ஆய்”வுன்னா பாத்ரூம் மேட்டறோன்னு நெனைச்சி அந்த பக்கம் போயி யோச்சி நாறிட்டு வந்தது தான் மிச்சம்.

இதனால சிங்கை பதிவர்களே.. கருத்தாய்வுன்னா இன்னான்னு அல்லாருக்கு புரியிற மாதிரி வெளக்கிட்டு அப்பாலிகா போட்டியை வெச்சா கலந்துகணுமுன்னு நெனைக்கிறவங்களுக்கு நல்லா இருக்கும்.. அப்புறம் போட்டி தளத்துல ஒரு பதிவு மாதிரி போட்டு அதுக்கு பின்னூட்டம் போடுற வசதியை செய்து கொடுத்திங்கண்ணா என்னைய நக்கீரனுங்களுக்கு கேள்வியை மட்டும் கேட்டுட்டு நடையை கட்ட வசதியா இருக்கும். அப்படி இல்லாட்டி Faq பகுதியையோ இல்லை தமிழ்வெளியில இருக்குற மாதிரி சேட் (சவுக்கார் பேட்டை சேட்டு இல்லிங்க வெட்டி பேச்சி பேசுவாங்களே chat அந்த சேட்) மூலம் கேள்விகளுக்கு பதில் கொடுக்கும் வசதி செய்து குடுத்தா நல்லா இருக்கும்.

இதெல்லாம் செய்து குடுத்தா நீ எழுதி கிழிச்சிடுவியான்னு குசும்பனை மாதிரி கேக்குற ஆளுங்களுக்கு நான் சொல்லிகிறது என்னானா..நம்ம அறிவுக்கும் அழகுக்கும் புக்கர் பரிசுக்கோ,நோபல் பரிசுக்கோன்னா எழுதலாம்..சிங்கப்பூருக்கு போறதுக்கும் சிலுக்குவார்பட்டிக்கு போறதுக்குமா எழுத முடியும்..போங்கப்பூ போயி புள்ளைங்களை படிக்க வெயிங்கப்பூ..ரைட்டு வரட்டா அப்ப நெக்ஸ்டு மீட் பண்ணலாம்..

சந்தோஷங்களுடன்
சந்தோஷ்...
Read On 12 பேர் கருத்து சொல்லி இருக்காங்க நீங்களும் சொல்லலாமே

எலக்கியவியாதி ஆவது எப்பூடீஈஈஈஈஈஇ?

Wednesday, July 15, 2009
சமீபகாலமா பதிவுலகத்துல எலக்கியவியாதி ஆகி சும்மா போறவனை வம்புக்கிழுத்து வெளம்பரம் தேடுறது தான் லேட்டஸ்டு பேஷன்..ஆயிரம் வசதி வாய்ப்பு இருந்தும் எலக்கியவியாதி ஆவ முடியலையேன்னு பீல் பண்றவங்களுக்கு உதவட்டுமேன்னு தான் இந்த பதிவு..

முதல்ல நீங்க செய்ய வேண்டியது அடுத்தவனுக்கு புரியுற மாதிரி எழுதுறதை நிறுத்தனும். நீங்க எழுதுறதை படிச்சிட்டு அவன் அவனுக்கு இது தமிழ் தானான்னு சந்தேகம் வரணும். உங்க எழுத்தை படிச்சிட்டு அதை படிக்கிறவனுக்கு வாந்தி, பேதி swine flu போன்ற நோய்கள் வந்தா நீங்க பெரிய எலக்கியவியாதி ஆகிட்டிங்கன்னு அர்த்தம்.

பதிவுக்கு நடு நடுவுல கட்டுடைத்தல், பிட்டடித்தல்,பின்னவினத்துவம்,சைடு நவினவத்துவம், விளிம்பு நிலை, களிம்பு நிலை அப்படி இப்படின்னு தமிழ் வார்தையான்னு சந்தேகம் வருகிற வார்த்தைகளை தெளிச்சி விடணும்...

அடுத்து நீங்க செய்ய வேண்டியது தமிழ்நாட்டுக்காரங்களை திட்டுறது..தமிழ்நாட்டுல எலக்கியவியாதிங்களுக்கு மரியாதையே இல்லை உகாண்டாவை பார், உருகுவேயை பார், உட்லாண்ட்ஸ் ஓட்டலை பார் (மக்களே Bar இல்ல பார்) அவங்க எலக்கியத்துக்கு குடுக்குற மரியாதையை பார் கவுரவத்தை பார் அப்படின்னு யாரோ உங்களை தமிழில் மட்டுமே எழுத சொன்ன மாதிரி சவுண்டு விடணும்.

அடுத்து சரோஜாதேவி மாதிரி பிட் படங்கள், நாவல்களில் இருந்து கதைகளை உருவி லைட்டா அங்க இங்க மாற்றம் செய்து பகாவின் கதை, வெதிதனின் கதைன்னு எழுதணும். அப்படியே அனானியாவோ இல்ல அல்ல கையை விட்டுடோ பின்னூட்டத்துல தல நீங்க தான் பகாவாமேன்னு? அப்படின்னு ஒரு கேள்வியையும் கேட்டு பின்னூட்டத்துல ஒரு அசட்டு சிரிப்பு சிரிச்சி அதை பொதுவுல எப்படிங்க சொல்றதுன்னு சொல்லி, அப்பாவி அய்யாசாமிங்களை டரியலாக்கணும்.

அப்படியும் இல்லாட்டி வழக்கம் போல அனானியா தல உங்களோட இசையார்வம் என்னைய மெய் சிலிர்க்க வைக்குது, எஸ்.ஏ. ராஜ்குமார் இசையமைச்ச பாடல்களில் உங்களுக்கு புடிச்ச ஆயிரம் பாடல்களை சொல்லுங்களேன்னு ஒரு பிட்டை போட்டு, அதை ஒரு தனி பதிவா போட்டு, புடுங்குறதுக்கு ஆணியே இல்லாட்டியும், அலுவலகத்தின் வேலை பளு காரணமாக ஒரே பதிவாக ஆயிரம் பாடல்களையும் பதிவிட முடியாது, அதனால நேரம் கிடைக்கும் பொழுது போடுறேன்னு சொல்லிட்டு அரை மணி நேரத்துக்கு ரெண்டு ரெண்டு பாட்டை ஒரு பதிவுல போட்டு பட்டையை கிளப்புங்க..

தமிழில் எப்பவாச்சும் எல்லாருக்கும் புடிக்கிற மாதிரி ஒரு நல்ல படம் வெளிய வரும், அதுல ஹீரோ போடுற ஜட்டி கலர் விளிம்பு நிலை மனிதர்களை நோவடிக்கிற மாதிரி இருக்குங்கிற மாதிரி எலக்கியத்துவமான காரணம் ஒண்ணை கண்டுபுடிச்சி எனக்கு படம் புடிக்கலைன்னு விமர்சனம் போடணும். வில்லு மாதிரி படங்களுக்கு விமர்சனம் போடும் பொழுது ஆகா இந்த காட்சியில இயக்குனர் செய்த எலக்கிய கட்டுடைத்தல் இருக்கே ஆகா ஓகோண்ணு புகழணும்.

முடிந்த அளவுக்கு தமிழ்படங்களை பத்தி பேசவோ எழுதவே கூடாது.. உங்க பேரை இங்லீபீசுல எழுத தெரியாட்டியும், ஈரான் இயக்குனர் இயன் குவான் படங்கள் சூப்பருன்னு ஒலக படங்களை பத்தி எழுதணும்.முக்கியமா அதை திருட்டு விசிடியில படத்தை பாத்துட்டு முதலாளித்துவத்தை எதிர்த்து நீங்க செய்ற போராட்டமா அதை வெளிக்காட்டணும்.

இதெல்லாம் செய்தும் உங்களுக்கு எழுத எதுவுமே இருக்காது, இருந்தாலும் கூகுளை சும்மா வுடலாமா? அங்க இங்க எழுத்து கூட்டி படிச்சதில் பிடிச்சது, forward மெயிலில் வருவது, Spam mailல வரதுன்னு நிதமும் எந்த எழைவையாவது காபி பேஸ்டு செய்யணும்.காலையில எழுந்து பல்லு வெளக்கறீங்களோ இல்லையோ எழுந்த உடனே எலக்கிய வட்டத்துல இருக்குற நாலு பேருக்கு பின்னூட்டமும் உங்க தளத்துல ஒரு பதிவும் போடுறது எலக்கிய சேவைக்கு ரொம்ப முக்கியம்.

இப்படியேல்லாம் செய்றதை பாத்து ஏதாவது ஒரு மானஸ்தன் உங்களை நாக்கை புடுங்குற மாதிரி நாலு கேள்வி கேப்பான் அவனை சும்மா விடக்கூடாது, அதை அப்படியே ஒரு பதிவா போட்டு உகாண்டாவின் போண்டாவாயான் சுட்ட முட்டை போண்டாவை துண்ணுருக்கியா, ஆப்ரிக்கா பேரிக்காயை துண்ணுருக்கியா, அமெரிக்கா ஆப்பாயிலை வாயில போட்டு இருக்கியான்னு கேள்வியா கேட்டு அவனை டரியலாக்கணும்.

இதெல்லாம் செஞ்சா உங்களுக்கு எலக்கியவியாதி வருவதற்கு சே ஆவதற்கான எல்லா தகுதிகளும் வந்துடிச்சின்னு அர்த்தம். அப்படியே ஏதாவது விட்டு போச்சின்ன பின்னூட்டத்துல சொல்லுங்க.. பாவம் நம்ம பசங்க படிச்சி தெளிஞ்சி எலக்கியவியாதி ஆயிட்டு போவட்டும்.
Read On 32 பேர் கருத்து சொல்லி இருக்காங்க நீங்களும் சொல்லலாமே

கருத்தாய்வு செய்யுங்க சிங்கப்பூர் செல்லுங்க

Thursday, July 02, 2009
சிங்கப்பூரை சேர்ந்த பதிவர் செங்கோணங்களும் (அட எம்முட்டு நாள் தான் வட்டமா இருப்பாங்க) தமிழ்வெளி இணைய திரட்டியும் சேர்ந்து புதுசா ஒரு போட்டி வெச்சி இருக்காங்க.. அதுல நீங்க கருத்தாய்வு (அது என்ன ஏதுன்னு அங்கேயே கேட்டு தெரிஞ்சிகோங்க) செய்து அதுல நீங்க வெற்றி பெற்றால் உங்களை சிங்கப்பூருக்கு கூட்டிட்டு போறாங்களாம்பா.. இதுக்கு மேல விவரம் தெரிய இங்கன கொட்டுங்க சே சுட்டுங்க..வழக்கம் போல சொக்கா எனக்கில்லை எனக்கில்லைன்னு சொல்லிட்டு சங்கத்தை கலைப்பது..

சந்தோஷங்களுடன்
உங்க சந்தோஷ்..
Read On 4 பேர் கருத்து சொல்லி இருக்காங்க நீங்களும் சொல்லலாமே

எழுச்சி நாயகன் ஜே.கே ரித்தீஷின் வாழ்க்கை வரலாறு

Wednesday, June 10, 2009

நிகழ்கால இந்தியாவின் வெடிவெள்ளி சே... விடிவெள்ளி, வருங்கால இந்தியாவின் எழுச்சி நாயகன்,வாழும் பாரி (நீங்க என்னைய பாத்து துப்பாதிங்க காரி), எட்டாவது வள்ளல், சீறும் செங்கிஸ்கான், புன்னகை பூங்கா, வாழும் வரலாறு, திமுகாவின் அடிமட்ட தொண்டன் வீரத்தளபதி அண்ணன் ஜெ.கே ரித்தீஷின் எம்.பி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எல்லாரும் இங்க படிச்சி தெரிஞ்சிகோங்கோஓஓஓஓ...


அண்ணே தொண்டை தண்ணி வத்த இம்முட்டு கூவி இருக்கேன் ஏதோ நீங்களா பாத்து திமுகாவுல ஒரு எம்.எல்.ஏ பதவியோ, ஒரு மாவட்ட செய்லாளர் பதவியே இல்ல ஒரு கவுன்சிலர் பதவியோ போட்டு குடுங்க நானும் என்னோட அடுத்த பத்து தலமுறையும் உங்க பெயரை சொல்லி பொழச்சிகிறோம்....

Read On 3 பேர் கருத்து சொல்லி இருக்காங்க நீங்களும் சொல்லலாமே

சத்யம் நிறுவனத்தில் குறைந்த பட்சம் 5000 பேர் வரை வேலை இழக்கலாம்

Thursday, June 04, 2009
சத்யம் நிறுவனத்தை வாங்கியுள்ள Tech Mahindra நிறுவனம் வேலை இழப்பு இருக்காது அப்படி என்று கூறி வந்தாலும் சத்யம் நிறுவனத்தில் வேலை செய்யும் நண்பர்களிடம் கேட்ட வரையில் சுமார் 5000 முதல் 10000 பேர் வரை வேலை இழக்க நேரிடலாம் என்று தெரிகிறது. ஏற்கனவே 10000 பேர் வேலையில்லாமல் Bench இல் இருப்பது தெரிந்த விஷயமே, ஆனால் அவர்கள் Benchஇல் இருப்பவர்கள் அனைவரையும் வேலையில் இருந்து தூக்க வாய்ப்பு இல்லை ஆனாலும் Bench Strengthஇல் சுமார் 40-50% வேலையிழப்பு இருக்கும் என்றும், Support Staffs (HR, admin) போன்ற துறைகளிலும் கணிசமான வேலையிழப்பு இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

சத்யம் போன்ற நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களில் வேலையிழப்பு இருப்பது எதிர்பார்க்கப்பட்டதே ஆனால் நல்ல லாபத்தில் இயங்கும் Infosys, TCS, Wipro போன்ற பல நிறுவனங்கள், இது தான் சமயம் என்று முடிந்த வரை வேலை பளுவை அதிகப்படுத்துவது, சம்பளத்தை கணிசமான அளவு குறைப்பது, பணி உயர்வை கால வரையின்றி நிறுத்தி வைப்பது, முடிந்த அளவு Benefits குறைப்பது போன்ற பல விஷயங்களை செய்து தாங்களும் அந்நிய நாட்டு MNCக்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்று நிறுபித்துள்ளன.

IT துறையில் வேலையிழப்பு ஒரு தொடர்கதையாகி வருகிறது ஆனால் பழைய பிஜேபி அரசாங்கம் போல காங்கிரஸ் அரசும் இந்தியா ஒளிர்கிறது, மிளிர்கிறது என்று சொல்லிக்கொண்டு திரிகிறதே தவிர இது போன்ற விஷயங்களில் தலையிடுவதாக தெரியவில்லை. இது எங்க போயி முடியுமோன்னு தெரியலை.

தமிழ்மண கருவிபட்டையை என்னுடைய பதிவில் நிறுவ முடியலை யாராச்சும் கொஞ்சம் உதவி செய்ய முடியுமா? தமிழ்மணம் இந்த இடத்தில் சொல்லியிருக்குற மாதிரி தான் செய்தேன் ஆனாலும் வேலைக்கு ஆவலை :(..
Read On 2 பேர் கருத்து சொல்லி இருக்காங்க நீங்களும் சொல்லலாமே

ஹிந்து - செய்தித்தாளா இல்ல அந்நிய நாட்டு ஏஜெண்டா?

Wednesday, June 03, 2009
ஹிந்து பத்திரிக்கை காரனுங்க பேப்பர் நடத்துரானுங்களா இல்ல அடுத்த நாடுகளுக்கு காசு வாங்கிட்டு PR இல்ல கைக்கூலியா வேலை செய்றானுங்களான்னு தெரியலை. இப்படித்தான் முன்னாடி இலங்கை பிரச்சனையில காசு வாங்கிட்டு ராஜபக்சேவுக்கு காவடி துக்கிட்டு இருந்தானுங்க இப்ப ஆஸ்திரிலேயாவுக்கு காவடி தூக்கிட்டு இருக்கானுங்க. நமக்கு எல்லாருக்குமே தெரியும் ஆஸ்திரேலிய மக்கள் ஒரு இனவெறி புடிச்சவனுங்கன்னு. அதுலயும் இப்ப திடீரென என்ன ஆச்சுன்னு தெரிலை தொடர்ந்து இந்தியர்களையே குறிவெச்சி தாக்குதல் நடத்திட்டு இருக்காங்க. இந்த லட்சணத்துல இன்னிக்கு இந்துல ஒரு செய்தி ஆஸ்திரிலேயாவுல விக்டோரியா பல்கலை கழகத்துல மாணவர்களுக்கு வழிகாட்டியா அவங்க எப்படி நடந்து கொள்ள வேண்டும், எங்க போகணும் எப்ப போவணுமுன்னு ஒரு கருத்தரங்கம் நடத்துனாங்களாமா அதுல கலந்துகொண்ட இந்திய மாணவர்களுக்கு பெரிய அளவுல நம்பிக்கை ஏற்பட்டு இருக்காமாம், ஆஸ்திரிலேயா பாதுகாப்பா மாறிவிட்ட மாதிரி ஒரு பில்டப்பு குடுத்துட்டு இருக்காணுங்க.இப்படி அடுத்த நாட்டு காரனுங்க கிட்ட காசு வாங்கிட்டு பத்திரிக்கை நடத்துறதுக்கு எதுக்கு பேப்பரை காசுக்கு விக்கறிங்க பேசாம இலவசமாவே குடுக்கலாமே?
Read On 8 பேர் கருத்து சொல்லி இருக்காங்க நீங்களும் சொல்லலாமே

இலங்கை படுகொலைகளை மறைக்கும் ஜநா

Sunday, May 31, 2009
டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்ட இந்த‌ கண்ணொளியில், ஜநா தலைவர் பேன் கின் மூனுக்கும், விஜய் நம்பியாருக்கும் இலங்கையில் நடந்த மாபெரும் படுகொலைகளை பற்றி ஊடகங்களுக்கு தெரிவதற்கு பலவாரங்கள் முன்னரே தெரிந்து இருந்தும் அதை அவர்கள் மறைக்க முறபட்டதாக தெரிகிறது. சுமார் 20000 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக ஊகிக்கும் மனித உரிமை கழகங்கள், இது குறித்து தனியாக ஒரு விசாரணை செய்யுமாறு ஜநாவை வலியுறுத்தியுள்ளதாக தெரிகிறது..



தெ**பசங்களா தமிழனா பொறந்ததை தவிர இவங்க வேற என்னடா தப்பு செஞ்சாங்க? இப்படி அநியாயமா கொன்னு குவிச்சியிருக்கிங்களேடா..
Read On 13 பேர் கருத்து சொல்லி இருக்காங்க நீங்களும் சொல்லலாமே

விஷமாக மாறி வரும் உணவு

Friday, May 15, 2009
பள பள ஆப்பில்,மின்னும் strawberry, அழகான pack இல் மின்னும் கொய்யாப்பழம், விதையே இல்லாத திராட்சை, அழகாக காட்சியளிக்கும் கத்திரிக்காய் இதெல்லாம் பார்த்துவிட்டு சே விஞ்ஞானம் என்னமா வளர்ந்துடிச்சின்னு வியக்குற ஆளா நீங்க? இல்ல நாட்டு காய் எல்லாம் பாருங்க எப்படி வாடி வதங்கி இருக்கு Hybrid வகை காய்கறிகளும், பழங்களும் பாருங்க எப்படி சும்மா பள பளன்னு மின்னுதுன்னு வாங்குறவரா நீங்க.. உங்களுக்கு தான் இந்த ஒளிப்படம், Hybrid மற்றும் Genetically Modified உணவுகள் உடம்புக்கு எவ்வுளவு தீங்கானது அப்படின்னு இங்க விளக்கி இருக்காங்க பாருங்க.. கொஞ்ச நீளமான படம் தான் ஆனா தவற விடக்கூடாத நல்ல கருத்துள்ள படம்.



இந்த படத்துல அவங்க பெரும்பாலும் BTO என்ற நிறுவனத்தை குறிவைத்து எதிர்த்தாலும் என்னுடைய கருத்து இயற்கையை எதிர்த்து அதை மாற்றி நாம் செய்யும் எதுவுமே இந்த உலகிற்கு எதிர்வினையான விளைவுகளையே தருகின்றன.. இது பற்றி கருத்து சொல்ல நம்ம தெ.கா தான் சரியான ஆளு..தல இது பற்றி ஒரு பதிவு போடுங்க தல..

Read On 7 பேர் கருத்து சொல்லி இருக்காங்க நீங்களும் சொல்லலாமே

சந்தோஷ் கடை அல்வா mfg dt 13/05/09

Wednesday, May 13, 2009
அல்லாரும் அவியல்,பொரியல்,வறுவல்,பஞ்சாமிர்தம் அப்படி இப்படின்னு பல பெயரில் பலவகையா டிஷ்ஷா செஞ்சி போடுறாங்க நீயெல்லாம் ஒரு பதிவரான்னு மனசாட்சி மண்டிபோட்டு அறைஞ்சதால் சரி நாம் ஒரு சேஞ்சுக்கு அல்லாருக்கும் அல்வா குடுக்கலாமுன்னு கடையை தொறந்து இருக்கேன்.. அல்லாரும் தொடர்ந்து அல்வா சாப்பிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க..

IPLல சுமார் 25000 கோடி ரூபாய் அளவுக்கு பெட் கட்டி இருக்காங்களாமாம்.. சராசரியா அவங்க வீசுற ஒவ்வொரு பந்து மேலயும் 2 கோடி அப்படிங்கிற அளவுக்கு பணம் வெளயாடுதாம்...

இந்த வருசம் தேர்தலுக்கு சுமார் 50000 கோடி செலவு செய்து இருப்பாங்கன்னு ஒரு பட்சி சொல்லுது..

என்னாது காந்தி பொறந்துட்டாராங்கிற மாதிரி இருக்கு BSNL நிறுவனத்தின் விளம்பரங்கள், அவன் அவன் GPRS அது இதுன்னு விளம்பர செய்துகிட்டு இருந்தா இவங்க இப்ப தான் Caller tunesக்கு விளம்பரம் செய்றாங்க... நல்ல வேலை Incoming freeன்னு விளம்பரம் செய்யாம போனாங்களே..

வழக்கம் போல ஜெ ரெட்டை இலைக்கு ஓட்டு போட்டா கூட அது சூரியனுக்கே ஓட்டு விழுதுன்னு ஒரு அர்த பழசான ஜோக்கை அடிச்சி இருக்காங்கா.. ஆத்தா அடுத்த எலெக்‌ஷனுக்குள்ள வேற நல்ல காரணத்தை கண்டுபிடிங்க இல்லாட்டி உங்க கட்சிக்காரங்களே உங்களை வெச்சி காமெடி பண்ண ஆரம்பிச்சிடுவாங்க.. புதுசா ஏதாவது ஜடியா வேணுமுன்னா நம்ம பதிவருங்க கிட்ட கேளுங்க அள்ளி வீசுறோம்..

எப்படி இருந்த வைகோ இப்படி ஆயிட்டாரு.. ஜந்து இடங்களில் வெற்றி பெறுவோம் பத்து இடங்களில் பட்டைய கிளப்புவோமுன்னு சொல்லிட்டு இருந்தவரு திருமங்கலத்தில் வெற்றி பொறுவேன்னு சொல்ற மாதிரி ஆயிடிச்சி..

தேர்தல் நாள் அன்னிக்கு ஓட்டு போட்டுட்டு பிருந்தாவன்ல பெண்களூருக்கு வந்துட்டு இருக்கேன்.. டிரையின்ல ஒரே கூட்டம் நான் கவனிச்ச வரைக்கு 50-60 வயசுக்கு மேல இருந்தவங்க எல்லார் கையிலும் ஓட்டு போட்ட அடையாளம் ஆனா 30-40 வயசு பசங்க யாரு கையிலும் அப்படி ஒரு அடையாளம் இல்ல.. இளைஞர்களின் கையில் நாளைய இந்தியா ரொம்ப சுத்தமா இருக்கு...

பதிவு போட்ட உடனே தமிழ்மணத்துல சேர்க்க முடியலை ஒரு 30 நிமிசமாவது ஆவுது எனக்கு மட்டும் தானா இது அல்லாருக்கு இப்படி தானா?

இன்னிக்கு சரக்கு அம்முட்டு தானுங்க..ரைட்டு வரடா நெக்ஸ்டு மீட் பண்ணலாம்.
Read On 9 பேர் கருத்து சொல்லி இருக்காங்க நீங்களும் சொல்லலாமே
Read On 17 பேர் கருத்து சொல்லி இருக்காங்க நீங்களும் சொல்லலாமே

நாராயணா இந்த எழுத்தாளருங்க லொள்ளு தாங்கமுடியலைடா

Friday, May 08, 2009
கொஞ்ச நாளா பிரபல எழுத்தாளருங்க பதிவுகளை எல்லாம் படிச்சிட்டு வரேன். அதென்னவோ தெரியலைங்க சொல்லி வெச்ச மாதிரி அல்லாரும் 3 பதிவுக்கு ஒரு பதிவு வாசகர் கடிதம், அதுக்கு பதில் அப்படி இப்படின்னே போட்டு தள்ளி இருக்காங்க.. இந்த கடிதம் ஒரே புகழ்ச்சி, சுய தம்மட்டமா இருக்கும் தாங்க முடியாது சாமியோவ்வ்வ்வ்....

பெரும்பாலான கடிதங்கள் இப்படி தான் இருக்கு சார் உங்க கதையை படிச்சிட்டு எனக்கு நாலு நாளா சோறு எறங்கலை.. என் பொண்டாட்டிக்கு நாலு நாலா காய்ச்சலா இருக்கு எப்படி சார் உங்களால மட்டும் இப்படி முடியுதுங்கிற ரேஞ்சுல இருக்கும்..இல்லாட்டி உங்க கதையை சே சே எழுத்தை இல்ல இல்ல எலக்கியத்தை அண்டார்டிகா அமிர்தலிங்கம் பரிந்துரையின் பேரில் படித்தேன்னு ஆரம்பிச்சி.. உங்க சட்டை முதல் ஜட்டி வரை ஈரமாகுற மாதிரி நக்கியிருப்பாங்க..

இல்லாட்டி எவனாவது ஒருத்தன் சார் உங்க இமெயில் முகவரி என்னான்னு தெரியாம
பின்னூட்டம் போட்டு இருப்பான் அவனை புடிச்சி பாஸிஸம்,
போஸிஸம்..போண்டாயிஸமுன்னு வறுத்தெடுத்து அதையும் பதிவா போட்டு அவனோட இமெயில் முகவரியையே மறக்கும் படி பத்து பக்கத்துக்கு எழுதி இருப்பாங்க..

அப்படியே வாசகருங்க யாரும் கடுதாசி போடாட்டி ஒரு எழுத்தாளரு இன்னொரு எழுத்தாளருக்கு கடுதாசி போடுறாரு.. அதுக்கு அவர் பதில் போட்டு அந்த பதிலுக்கு இவர் இன்னொரு பதில் போட்டுண்ணு.. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..அரசியல் வியாதிங்க தோத்தாங்க போங்க..

அப்படியும் முடியாட்டி எவனாவது chatல ஹாய் சொல்லியிருப்பாங்க அந்த பிரச்சனையை ஒரு பெரிய பிரச்சனையாக்கி..அவனை நோக வெச்சி நோகவெச்சி வேகவெச்சி நூடுல்சாகி..அதையும் ஒரு பதிவாக்கிடுவாங்க..

இன்னும் சிலரு ஆப்ரிக்காவுல தமிழுக்கும், எழுத்தாளருக்கும் இருக்குற மரியாதை தமிழ்நாட்டுல இல்ல.. என் பேரை சொன்னதால அவருக்கு அண்டார்டிகாவுல அமரேசனை ஆய் போவ அலவ் பண்ணாங்க ரேஞ்சுல அளப்பரையை விட்டு இருக்காங்க..

நமக்கு எதுக்கு இந்த விளம்பரம் நமக்கு இந்த பத்திரிக்கை காரணுங்க தான் வாசகர் கடிதம் கேள்விபதிலுன்னு தங்களுக்கு தாங்களே கடுதாசி போட்டு விளம்பர படுத்துறாங்கன்னா நமக்கு இது தேவையா? எழுதுறதுக்கு எழுதும் இல்லாட்டி சும்மா இருங்க சாமிங்களா.. இடம் காலியா இருக்கு இப்படி கண்டதை எழுது தமிழில் எதையாவது படிக்கலாமுன்னு வரவங்களை அப்படியே தொரத்தி விட்டுடாதிங்க....
Read On 29 பேர் கருத்து சொல்லி இருக்காங்க நீங்களும் சொல்லலாமே

வருமான வரித்துறையினரின் புது வகையான லஞ்ச டெக்னிக்

Saturday, May 02, 2009
ரெண்டு வாரத்துக்கு முன்னாடி Income Tax department velloreல இருந்து வீட்டுக்கு ஒரு போன் இது மாதிரி இது மாதிரி நீங்க போன வருசம் IT file பண்ணி இருக்கீங்க இல்ல அதுல குத்தம் இருக்குது சீக்கிரமா நேர்ல வந்து அதை நீக்கி உங்க காசை வாங்கிட்டு போங்கண்ணு சொன்னாங்க.. அடடா இம்முட்டு நாளா IT துறையை பத்தி எவ்வுளவு கேவலமா நினைச்சிட்டு இருந்தோம் இவங்க இம்முட்டு நல்லவங்களா இருக்காங்களேன்னு ஒரு நிமிசம் ஒரே பீலிங்கஸாப்போச்சி.... சரிங்க ஆபீசர் நேர்ல வரேனுங்க ஆபீசர் ஆனா நீங்க என்ன குத்தம் கண்டீங்க அப்படின்னு கேட்டா உங்க form 16ஜ காணோமுன்னு சொன்னாங்க...


ஒரு நிமிசம் அப்படியே ஷாக்காயிட்டேன்.. form 16 இல்லாம எப்படிடா tax file பண்ண முடியும்? நம்ம நல்ல ஆடிட்டரை வெச்சி தானே எல்லா வேலையையும் முடிச்சோம், அவரு இது மாதிரி தப்பு செய்ய மாட்டாரேன்னு சந்தேகம் வந்து ஆடிட்டருக்கு போன் பண்ணா சார் அவனுங்க கட்டிங்க எதிர்பாக்குறானுங்க ஒரு 10-15% குடுத்தா கைல செக்கை குடுத்துடுவாங்க அப்படிங்கிறாரு.இப்பவெல்லாம் வங்கி கணக்கு மூலமாக நேரடியா பணத்தை திரும்ப பெறும் வசதியை பெரும்பாலானோர் பயன்படுத்துவதால் இப்பவெல்லாம் இவனுங்க இப்படி செய்றானுங்க அப்படின்னு சொன்னாரு.எப்படியெல்லாம் புதுசு புதுசா யோசிச்சி லஞ்சம் வாங்குறானுங்க பாருங்க இவனுங்க.

எல்லாத்தையும் சரியா குடுத்தாலும் நம்ம காசை நாம் திரும்பி வாங்க இவனுங்களுக்கு தண்டம் அழவேண்டியதா இருக்கு :(. கருமம் புடிச்ச கம்பெனிகாரனுங்க வரியை சரியா புடிச்சி தொலைஞ்சா இந்த நாயிங்களுக்கு தண்டம் அழ வேண்டியது இல்ல. இப்ப தெரியுது ஏன் எவனும் நேர்மையா வரியை கட்ட மாட்டேங்கிறாஙன்னு.. இப்ப என்ன செய்யலாம் உங்களுக்கு ஏதாவது தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்களேன்?
Read On 12 பேர் கருத்து சொல்லி இருக்காங்க நீங்களும் சொல்லலாமே

தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களை விட இலங்கை முகாம் எவ்வுளவோ மேல்

Friday, May 01, 2009
சமீபத்தில் Shri Shri ரவிஷங்கர் இலங்கையை தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக இலங்கை சென்று வந்தார். அங்க போயிட்டு வந்த பின்னாடி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சில நல்ல உண்மைகளை வெளியிட்டுள்ளார்.

1. தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களை விட இலங்கை அரசு அமைத்துள்ள முகாமகள் நன்றாக உள்ளன.

2. இந்திய அரசு அனுப்பிய உதவி பொருட்களின் அளவு மிகவும் குறைவு.

3. இந்திய நிறுவனங்கள் (Airtel,Infosys) மனசு வைத்தால் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரலாம் ஆனால் அப்படி செய்ய யாருக்கும் அக்கரை இல்லை.

தமிழர்கள் பலர் இந்த நிறுவனங்களில் நல்ல பதவிகளில் இருக்காங்க.தமிழ் உணர்வாளர்கள் பலர் தீக்குளிப்பு, போராட்டம், அரசை சார்ந்தே இருக்காமல் இவர்கள் இது போன்ற நிறுவனங்களை அணுகி, அவர்களின் ஆதரவை பெற முயற்சி செய்ய வேண்டும் (lobbying), இந்திய நிறுவனங்கள் இலங்கை பெருளாதாரத்தில் மிகப்பெரிய பங்கை வகிக்கின்றன். Lobbying முயற்சிகளை விடுதலைப்புலிகளும், தமிழ் உணர்வாளர்களும் இதுவரை செய்ததாக தெரியவில்லை. போரில் இதுவும் ஒரு வகையான போர் ஆயுதம் ஏந்தி போரிடுவது எவ்வுளவு முக்கியமோ அது போல lobbying,PR போன்றவைகளும் மிக முக்கியம்.

4. இலங்கையில் தமிழ் பேசும் அதிகாரிகள் யாருமே இல்லை அப்படி யாரேனும் இருந்தால் தமிழ்மக்களின் நம்பிக்கை அதிகரித்து இருக்கும்.

இந்த செய்தி எனக்கு ரொம்ப வியப்பை அளிக்கிறது... எவ்வுளவு தமிழர்கள் இருக்கும் ஒரு நாட்டின் இந்திய தூதரகத்தில் ஒரு தமிழ் அதிகாரி கூட இல்லையா?

5. தீக்குளிப்பது, வேலை நிறுத்தம் செய்வது, உண்ணாவிரதம் (வீட்டுக்கு தெரிந்தும்/தெரியாமலும்) இருப்பது போன்ற செயல்களால் இந்த பிரச்சனைக்கு எந்த தீர்வும் கிடைக்காது. இதை விட தமிழர்களுக்கு உதவி பொருட்கள் அனுப்புவது போன்றவற்றில் அக்கரை செலுத்தலாம்.

Shri Shri ரவிஷங்கரை சந்தித்து அவர் காட்டிய வீடியோக்களை பார்த்த பிறகு தான் ஜெவின் அணுகுமுறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டதாக தெரிகிறது. இது பற்றி மேலும் செய்தி அறிய இங்கே சொடுக்கவும்.
Read On 4 பேர் கருத்து சொல்லி இருக்காங்க நீங்களும் சொல்லலாமே

உலகம் இன்னுமா என்னைய நம்பிட்டு இருக்கு?

கருத்தாய்வு செய்யுங்க சிங்கப்பூர் செல்லுங்கள்

Manarkeni 2009

என்னாங்கடா இது சம்பாரிக்க புது புது டெக்னிக்கா சொல்லிதராங்க


விலை கம்மியாமுல்ல